கனக கவிராயர்

28/03/2009 at 8:43 pm (கனக கவிராயர்)

இவரது இயற்பெயர் செய்கு நெயினார் என்பதாகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகெம்பீரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். தமிழ்ப்புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.

மதுரையிச் சேர்ந்த கொந்தாலகான் என்பவரின் விருப்பத்திற்கேற்ப, நபிகள் நாயகத்தின் அருமைப்பேரர் ஹுசன் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் பாடினார்.  ‘கனகாபிஷேக மாலை” (கி.பி.1648) என்ற பெயரில் அமந்த அந்தக் காப்பியமே முதல் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்காப்பிய மாலை 35 படலங்களைக் கொண்டது. 2,792 விருத்தப்பாக்களால் அமைந்தது. இந்தக் காப்பியத்தை புனைந்த காரணத்தால் இவரது இயற்பெயர் நாளடைவில் மறைந்து “கனக கவிராயர்” என்ற பெயரே நிலைபெற்று விட்டது.

இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கியத்திற்கு மாபெரும் பங்களிப்பச் செத குணங்குடி மஸ்தான், தொண்டி ஷைகு மஸ்தான் போன்றோர் இவர் வழி வந்த புலவர் பெருமக்களாவர்.

“கனகாபிஷேக மாலை” நூலை பீ. டாக்டர் நசீம்தீன் திறனாய்வுச் செய்து புத்தகம் எழுதியுள்ளார். இதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: