அவர் எங்கள் உயிருக்கு மேல்

25/09/2012 at 2:47 pm (Uncategorized) ()

 

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவனைத்தான் மறைத்திடுமோ?
ஆணவக்காரர்கள் தூற்றி உரைத்தாலும்
அண்ணலின் புகழ்தான் குறைந்திடுமோ?

தாயினும் மேலாம் தலைவனை இகழ்ந்தால்
தகதகத்திடுமே எம் நெஞ்சு!
நாயினும் கேவலம் ஆனவன் கக்கிய
யூதக் கயவனின் விஷநஞ்சு!

உயிரினும் மேலாய் உவப்பை பொழியும்
உத்தமர் வாழ்வை பழித்தனரே!
ஒற்றுமைக் கயிற்றினை ஒன்றாய் பிடித்து
உம்மத்து யாவரும் எழுந்தனரே!

உத்தம நபியின் பற்களில் ஒன்று
உஹதுப் போரில் விழுந்ததுவே!
அத்தனைப் பல்லையும் தகர்த்திய தோழர்
உவைசில் கர்னியை மறவோமோ?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
என்னும் பேரணி தொடருதடா!
பப்படமாகி நொறுங்கிடும் அந்த
பயங்கர திட்டம் நொடியிலடா!

பேரொளி இறைவனின் பிரிய நபிகளை
காணொளி ஒன்றா கறைபடுத்தும்?
தீனொளி இன்னும் உலகமெங்கிலும்
திக்குகளெங்கும் பரவி நிற்கும்!

யூதக்கயவனே! எழுந்த கனலினை
இதயத்தில் நிறுத்தி இதனைக் கேள்!
தூதர் முஹம்மதுக்கு களங்கம் சூழ்ந்தால்
துடிப்போம்! அவர் எங்கள் உயிருக்கு மேல்!

– கவிஞர் அப்துல் கையூம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: