குட்டி இளவரசியின் அறிதல்கள்
மனுஷ்ய புத்திரன் எனும் பெயரில் அற்புதமாக எழுதி வரும் அப்துல் ஹமீதின் கவிதை ஒன்று சாம்பிளுக்கு:
காலம் என்கிறீர்கள்
அகாலம் என்கிறீர்கள்
காலத்தை வெல்வதென்றும்
காலத்தைக் கடப்பதென்றும்
பயங்கரக் கதைகள் சொல்கிறீர்கள்
குட்டி இளவரசி சஹானா
நாளைக்கு மழை பெய்தது ‘
என்கிறாள் அமைதியாக
– கவிஞர் மனுஷ்ய புத்திரன் (இடமும் இருப்பும் என்ற கவிதைத் தொகுதியிலிருந்து)